
யாழ். சக்கோட்டை அல்வாய் வடமேற்கைப் பிறப்பிடமாகவும், அரியாலை பொன்னம்பலம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு அருளானந்தம் அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராயப்பு, நத்தாலிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி இமாக்குலேற் அவர்களின் அன்புக் கணவரும்,
றஞ்சித், கிறிஸ்ரபெல்(பபா), கிளறபெல்(குட்டி), எட்மண்ட் சுரேஷ்(ராசா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
எட்லீஸ், யோண்பிள்ளை, திருச்செல்வம், அருள்தாஸ், பிரான்சீஸ்கா, பாக்கியநாதன், இசபெலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிறீ, தூயமணி, அமரபாலா, யூலியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிருதிவிராஜ், கவிராஜ், பியனு, றொசானி, நிஷான், செறிங்ரன், செறோனி, செமோறின், யேசன், ஒலிவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-01-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு சக்கோட்டையில் அவரது தாய் இல்லமான வளனகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 03:00 மணிக்கு சக்கோட்டை புனித சவேரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பழைய வேதக் கோவிலடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.