2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் ஆனந்தகோபால் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது
அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!
உன்னை பிரித்து விட்டு
எங்களை
பிரிந்து விட்டு சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
நாங்கள் அழுகின்றோம்....
உன் மலர்ந்த பூ முகமும்
கிழ்ச்சி பொங்கி நிற்கும்
உன்
முத்தான புன்சிரிப்பையும்
பார்ப்பது எங்கே?
உன் வரவை பார்த்து பார்த்து
ஏங்குது எம்மனம்!
வையக வாழ்வு முடியும் வரையில்
உனது இனிய நினைப்போடே
எங்கள் காலம்...
தகவல்:
தங்கவடிவேல் சகோதரர் குடும்பத்தினர்