Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 02 FEB 1933
விண்ணில் 24 JUN 2017
அமரர் இரத்தினமணி சிவஞானசுந்தரம்
வயது 84
அமரர் இரத்தினமணி சிவஞானசுந்தரம் 1933 - 2017 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு கோட்டைமுனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney, Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினமணி சிவஞானசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அம்மா உங்கள் குரல் கேட்காது
 ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
 அரவணைத்த உங்கள்
 பாசக் கைகள் எங்கே!!

அள்ளித் தந்த அந்த அமிர்த
 சுவைகள் எங்கே முத்தமிட்ட
உங்கள் மூச்சு எங்கே முடிச்சு
 வைத்த பாசக் கதைகள் எங்கே

அம்மா நாம் கண் திறந்த போது
 உங்கள் திருமுகத்தை
கண்டு சிரித்தோம்
 அன்று உங்கள் கண்கள்
 திறக்க மறுத்த போது எங்கள்
வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
 அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்
 ஆதரிக்க யாருமில்லை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!!

தகவல்: குடும்பத்தினர்