

-
06 JUL 1952 - 22 JUL 2019 (67 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஜேர்மனி, Germany Markham, Canada


அன்பு பெரிய நாதன் மாமா , உறவுகள் எல்லோரும்ஒரேநேரத்தில்சொல்லிவைத்தால்போல் பிரியும்பொழுது மனம்கனக்கின்றது.மண்ணில் பிறந்த எல்லோருக்கும் இறப்பு உண்டென அறிந்தும் மாய வாழ்வை நினைத்து மனிதன் அழுகின்றான் என்று ஒரு முறை தாங்கள் கூறியது இன்றும் என் நினைவில் வந்து மோதுகின்றது.விதி வரைந்த பாதையில் தான் நம் வாழ்க்கை என்று சொன்ன சித்தர் நீங்கள்.சென்று வாருங்கள் மாமா. இந்த ஆன்மா அழிவில்லாதது.உடலால் பிரிந்து சென்றாலும் உணர்வுகளாய் எம் மனதில் வாழ்வீர்கள்.கால வெள்ளத்தில் உங்கள் நினைவுகள் ஒருபொழுதும் மாய்ந்துபோகாது பசு மரத்தாணி போல் எம் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். உங்களைப் போல் நற் பிறப்பினை எப்பிறப்பில் காண்போம் இனி?ஆறாது ஆறாது அழுதாலும் தீராது உங்கள் பிரிவு.நிழல் படமாய் விரியும் உங்கள் நினைவுளை பின்னோக்கி பார்க்கும்பொழுது எத்தனை பசுமையான ,பாசமான நினைவுகள் ,மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் கானல் நீராய் கனலிடைபோனதே.தங்கள் அன்பான சுகம் விசாரிக்கும் வார்த்தைகள் ,ஆதரவாய் அணைக்கும் கரங்கள் எல்லாவற்றையும் இழ ந்தோமே மாமா அன்னாரை இழந்து வாடி நிற்கும், குடும்பத் தினருக்கு எனது சார்பிலும்,எமது குடும்பம் சார்பிலும் ஆழ்ந்த மன வேதனையையும்,இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனின் பாதார விந்தங்களில் எனது கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்கு கின்றேன்.

Summary
-
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion