யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கு, இணுவில் கிழக்கு, மருதனார்மடம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் மணோன்மணி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
மணியக்கா நீங்கள் காலம் சென்ற விடையத்தை அறிந்து மனம் கலங்குகிறேன். சிறு வயதில் எனக்கு சோறுட்டி, என்னை குளிப்பாட்டிய ஞாபகங்கள் இன்றும் நினைவில் உள்ளன....