Clicky

31ம் நாள் அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
பிறப்பு 02 MAY 1938
இறப்பு 15 DEC 2022
அமரர் இராசலிங்கம் இராசலட்சுமி
வயது 84
அமரர் இராசலிங்கம் இராசலட்சுமி 1938 - 2022 உடுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் அந்தியேட்டியும், நன்றி நவிலலும்

யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கு யாமா சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் இராசலட்சுமி அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டியும், நன்றி நவிலலும்,

இன்றோடு 31 நாட்கள்
 அவனியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றோம்
 நிஜமாய் நாம் வாழ்ந்தோமா?

 நினைவுகள் வருகையிலே
 நிலைகுலைந்து போகின்றோம்
 காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !

 அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
 வார்த்தைகள் இல்லையம்மா

 மீண்டும் நீ வாருமம்மா
 வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
 உங்கள் முகம் என்னாளும் உயிர்வாழும்
 மண்விட்டு மறைந்த நீங்கள் விண்னோக்கி
 சென்றாலும் கண்விட்டு மறையாமல்
 பலகாலம் இருப்பீர்கள்

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி நிகழ்வுகள் 12-01-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இங்ஙனம், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்