Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 19 FEB 1937
விண்ணில் 09 MAY 2019
அமரர் இராசையா சிவஞானம் 1937 - 2019 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா சிவஞானம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 12-05-2024

பாசத்தின் பிறப்பிடமாய்
தாலாட்டும் அன்னையாய்
சீராட்டும் தந்தையாய் நீங்கள்
வாழ்ந்த காலங்கள்
எங்களால் மறக்க முடியாது

ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உங்கள் நினைவு எம்மை விட்டு அழியாது!

ஆலமரமாய் எம்மைக்
காத்த அன்புத் தந்தையே
உங்களை என்றென்றும் போற்றுகிறோம்
எங்கள் கண்களில் இருந்து
நீங்கள் மறைந்தாலும் ஆண்டு ஐந்து
ஓடி மறைந்தாலும் விழும்
மழைத் துளியும் வீசுகின்ற காற்றும்
வாழுகின்ற காலம் வரை
உங்கள் நாமம் வாழும் ஐயா..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் குலதெய்வம் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்