யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம் வவுனிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை இராசையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் , தொலைபேசியூடாகவும் , முகநூல் , RIPBOOK ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் , அனுதாபச்செய்தி தெரிவித்தவர்களுக்கும் , கண்ணீர் அஞ்சலி பிரசுரம், சுவரொட்டி போன்றவற்றை பிரசுரித்தவர்களுக்கும், இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நினைவுரையாற்றியவர்களுக்கும், தொடர்ந்து இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் இன்றுவரை எமக்கு பல வழிகளிலும் உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் மற்றும் உற்றார் , உறவினர் , நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் .
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 01-01-2022 சனிக்கிழமை அன்று கீரிமலை புனித
தீர்த்தக் கரையிலும் , வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 02-01-2022
ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற
இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின்
ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும்
கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.