Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 26 MAY 1949
இறப்பு 03 DEC 2021
அமரர் வேலுப்பிள்ளை இராசையா 1949 - 2021 அனலைதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம் வவுனிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை இராசையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் , தொலைபேசியூடாகவும் , முகநூல் , RIPBOOK ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் , அனுதாபச்செய்தி தெரிவித்தவர்களுக்கும் , கண்ணீர் அஞ்சலி பிரசுரம், சுவரொட்டி போன்றவற்றை பிரசுரித்தவர்களுக்கும், இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நினைவுரையாற்றியவர்களுக்கும், தொடர்ந்து இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் இன்றுவரை எமக்கு பல வழிகளிலும் உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் மற்றும் உற்றார் , உறவினர் , நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் .

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 01-01-2022 சனிக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் , வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்