கண்ணன் உனது இழப்பு எமக்கு ஆழ்ந்த கவலையை தந்தது. சிறு வயதில் ஒன்றாக திரிந்தோம்.காலச்சூழலில் சிக்குண்டு பிரிந்தோம்.பிரான்ஸ் இறுதிக்காலம்வரை காணும்போது கதைத்து மகிழ்ந்தோம்.இரண்டு மாதம் முன்னாடி மானிப்பாய் போய்வரப்போவதாக சொன்னாய்.காலன் ஏன் அழைத்தான்....? அழைப்பை மறுக்கவா முடியும்? உறவு என்று ஒட்டாமல் வாழும் உறவை விட உணர்வால் புரிந்து கொண்ட நம் உறவு வலிமையானது...அதுதான் உன் பிரிவும் வலி தருகின்றது.நீ நல்லவன் உன் ஆத்மா இறைவனடி சாந்தியடையும்,நாமும் பிராற்திக்கிறோம்.