Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 16 OCT 1938
இறப்பு 09 JUN 2024
திருமதி இராசா நேசமலர்
வயது 85
திருமதி இராசா நேசமலர் 1938 - 2024 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அச்சுவேலி தம்பாலை சபாலேனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசா நேசமலர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உங்களைப் பார்ப்பது இனி எக்காலம்?

காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உங்கள் கோலமுகமும் 
உதட்டோரப் புன்னகையும் என்றும் மாறாது!

ஒரு உன்னதமான தெய்வம் நீ அம்மா
நாட்கள் 31 சென்றாலும் உங்களின்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா
ஆனால் முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்குதம்மா

துன்பம் துயரம் தெரியாமல்
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
நாட்கள் 31 ஆனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்
நம் உள்ளத்தின் உள்ளே வளரும்
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!


அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 07-07-2024ந் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் 09.07.2024ந் திகதி செல்வாய்க்கிழமை அன்று வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். 

முகவரி:
சபா லேன்,
தம்பாலை அச்சுவேலி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.