Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 JUN 1955
மறைவு 15 SEP 2021
அமரர் இரஞ்சினி சற்குணானந்தம்
வயது 66
அமரர் இரஞ்சினி சற்குணானந்தம் 1955 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி பெரிய அரசடி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட இரஞ்சினி சற்குணானந்தம் அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(இளைப்பாறிய சாவகச்சேரி இந்துக் கல்லூரி கனிஷ்ட அதிபர்), சின்னம்மா(இளைப்பாறிய ஆசிரியை- மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகரத்தினம் சற்குணானந்தம்(இளைப்பாறிய நல்லூர் உப தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

திருவரங்கன்(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தாயாரும்,

இராதா(இளைப்பாறிய ஆசிரியை டிறிபேர்க் கல்லூரி சாவகச்சேரி), இரவீந்திரன், இரஞ்சன், இரவிச்சந்திரன், இரதிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சரவணபவன், கலா, ரோகினி, ராதா, ஜெயேந்திரன், உமாசுந்தர், காலஞ்சென்ற கிருஷானந்தம் மற்றும் லோகானந்தம், ராணி, கலைவாணி, குமுதினி, குகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், சுந்தரமூர்த்தி, தங்கம்மா, நல்லம்மா மற்றும் அன்னலட்சுமி(லட்சுமி), ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

சின்னையா, திசைநாயகம், காலஞ்சென்ற அன்னலட்சுமி திசைநாயகம் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2021 திங்கட்கிழமை அன்று நல்லூரில் நாட்டின் சுகாதார விதிமுறைகளுக்கமைய நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சற்குணானந்தம் - கணவர்
திருவரங்கன் - மகன்
சரவணபவன் - மைத்துனர்
இரவீந்திரன் - சகோதரன்
இரஞ்சன் - சகோதரன்
இரவிச்சந்திரன் - சகோதரன்
இரதிதேவி - சகோதரி