Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 02 FEB 1944
விண்ணில் 12 MAY 2025
திரு இராமசாமி சோமசுந்தரம்
முன்னாள் யாழ் பரிஸ் ரெக்ஸ் உரிமையாளர்
வயது 81
திரு இராமசாமி சோமசுந்தரம் 1944 - 2025 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், இல. 105 அரசடி வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி சோமசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஆலமர விருட்சமாய் எல்லோரையும் தாலாட்டி சீராட்டி அரவணைத்த
உன்னதமான ஜீவன் நீழ் துயில் கொண்டு மாதம் ஒன்றாகிறது….
 எப்படிக் கழிந்தன இன்நாட்கள்…
நம்ப முடியவில்லை நம்மால்…
அனைத்துமே ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டன…!
 வாழ்க்கை முழுவதும் நம்மைச் சுமந்து தானீந்த கை…!
தனக்கென்று ஆசை ஏதுமின்றி,
நமக்கான அனைத்தும் தந்தவர்.

கடமைகளை மட்டுமே மனதில் சுமந்து விடாமுயற்சியோடு
 நம் சந்தோசத்திற்காகவே போராடியவர் …!
பத்து வயதில் தொடங்கிய வாழ்க்கைப் போராட்டத்தில் …
சோர்ந்து போகாமல் போராடி வென்ற எங்கள் குல தெய்வம்.
அறிவும் ஆழ்ந்த சிந்தனைகளும் நிரம்பிய அவரது பாதை தனித்துவமானது…!
மறக்க முடியாத வாழ்க்கைப் பாடங்களை
 மௌனமாகவே வாழ்ந்து கற்றுத் தந்தவர்.,!
உறவுகளை உயிரிலும் மேலாக மதிப்பவர் …

நம்முள் வந்த குழப்பங்களை மௌனத்தால் தீர்த்தவர்.
அளவுக்குள் வாழ்வதின் அழகை வாழ்ந்து காட்டி உணர்த்தியவர்..!
அமைதியாக இருந்து ஆழமாகச் சிந்தித்து…
 உழைப்பால் உயரலாம்
 என்ற நம்பிக்கையைத் தந்து வாழ்ந்தும் காட்டியவர்..!
உண்மை வாழ்வின் வழியைக் காட்டி
ஒற்றைப் பார்வையில் நமையெல்லாம் கட்டிப் போட்டவர்..!
அன்பும் பண்பும் கலந்திருந்த அந்த நெஞ்சம் ..

அத்தனை உறவுகளையும் தவிக்கவிட்டு..
மீழாத் துயில் கொண்டதேனோ?
திரும்பி வரமாட்டீர்களா என ஏங்கித் தவிக்கிறோம்…
நாம் வாழும் காலம்வரை உங்கள் நினைவுகளைச் சுமந்து நாம் வாழ்வோம்…
ஓம் சாந்தி..!ஓம் சாந்தி..!ஓம் சாந்தி..!்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 05:00 மணியளவில் "கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும்” வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 11-06-2025 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நன்றி

வீட்டு முகவரி:
இல. 105,
அரசடி வீதி,
யாழ்ப்பாணம். 


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.