31ம் நாள் நினைவஞ்சலி
அமரர் இராமலிங்கம் சிவகுரு
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 90
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கண்டி தங்கொல்லையை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவகுரு அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலி.
சிறு விரல் பற்றி
முகம் பார்த்து
வழிதடம் எங்கும்
முள்ளகற்றி
என்னுடன்
வழி நடந்த
என் பெரியமாமா!!!
கணப்பொழுதேனும்
நான் தாயின் அரவணைப்பையோ
தந்தையின் பாசத்தையோ
நினைத்து ஏங்கியதில்லை, ஏனெனில்
தாயுமானவனாய் நீயிருந்தாய்!
வானத்திலிருந்து
மௌனமாய் உதிர்கின்ற
நட்சத்திரப் பூ போல்
மின்னலாய் நீ மறைந்தாய்!
என் முன்னே தெரிகின்ற
வாழ்க்கை நெடும்பயணம்
வெறுமையாய் விரிகின்றது!
இயற்கை இடம் கொடுத்தால்
மீண்டும் உன்னுடன்
பிறப்பெடுக்க மனம் ஏங்குகின்றது!
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
திருமதி. தவவதனி பவகரன்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Dr. தவவதனி பவகரன் - மருமகள்
- Contact Request Details
மாதா பிதா குரு தெய்வம் எனும் வழியில் உங்கள் மாமா ஊருக்கு மட்டுமே ஆசானாக இல்லாமல் உங்களுக்கும் ஆசான் மாதா பிதாவாகி தெய்வமாகியுள்ளார். அன்னாருக்கு எனது அஞ்சலிகள் 🙏....