யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நவரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எம் நினைவோடு நினைவாகி
கனவோடு கனவாகி
உணர்வோடு உணர்வாகி
உயிரோடு உயிராக கலந்த
எம் அம்மாவே! அம்மம்மாவே!
பாசத்தின் சுமையோடு
எம்மை இங்கே பரிதவிக்கவிட்டு
நீங்கள் மட்டும் நெடுந்தூரம்
சென்றது ஏன்? அம்மா
நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்
ஆணிவேராய் எம்மை
காத்து நின்ற எங்கள் தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
நாட்கள் 31 ஆனாலும் ஆறவில்லை எம் மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
என்றென்றும் உங்கள் நினைவலைகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 08-12-2023 வெள்ளிக்கிழமை அன்று முகத்துவாரம் கோயில் வீதி, அந்தியேட்டிக்கிரியை மண்டபத்தில் நடைபெற்று, பின்னர் 09-12-2023 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் (11, இராசவள்ளி வீதி, ஹம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தை) ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து பி.ப 12:30 மணியளவில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
Losing a person like Peri Amma, whom we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to...