Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 19 JUL 1939
இறப்பு 27 AUG 2023
திருமதி இராஜேஸ்வரி முத்தையா 1939 - 2023 தனங்கிளப்பு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். தென்மராட்சி தனங்கிளப்பை பிறப்பிடமாகவும், சிவநகர் உருத்திரபுரம், சாவகச்சேரி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி முத்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

தாய் மரம் ஒன்று சரிந்தது
 எங்கள் நெஞ்சம் எல்லாம் நொருங்கியது
 தன் உயிர் போல எம்மை காத்த
எம் அன்னை நெடுந்ததூரம் போனது ஏனோ?
மாதங்கள் முப்பது எம்மை சுமந்து
 முக்கண்கள் போல பெற்றெடுத்து
பார் போற்றும் பண்புடன் வாழ்ந்தீரே
இனி எப் பிறப்பில் காண்போம் அம்மா
 மறுபிறப்பை கேட்கின்றோம்
 மறுபடியும் உங்களை காண்பதற்கு
 பாலூட்டி பண்புகள் பல ஊட்டி
வாழ்க்கையின் விம்பத்தை காட்டி
வைத்த எம் தாயே உங்களை தீ மூட்டி
சிவலோகம் அனுப்பி வைத்தோம்
 அந்த இராஜேஸ்வரி போல
மனம் ஏற்க மறுக்கிறது
 மறுபடியும் காண்போமா
எம் உயிர் அன்னையே… 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நன்றி.

Event place:
Canada Kanthaswamy Temple,
 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.