
அமரர் இராஜேஸ்வரன் பொன்னம்பலம் கனகநாயகி
இளைப்பாறிய சங்கீத ஆசிரியை
வயது 84

அமரர் இராஜேஸ்வரன் பொன்னம்பலம் கனகநாயகி
1936 -
2020
மீசாலை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மீசாலையம்பதியில் மிடுக்குடனே வாழ்ந்த
எங்கள் தந்தையரின் மாமனாராம் கனகரத்தினம்
பெற்றெடுத்த செல்வப்புதல்வியவள் கனக நாயகி
ஊரறிந்த நாயகியாய் உலாவந்தாள் - ஊரினிலே
எங்கள் தந்தைதனை வாத்தியார் வாத்தியார்
என்று செல்லமுடன் செப்பும் உன் வார்த்தைகள்
இன்றும் எங்கள் காதினிலே ஒரு வண்டின்
'ரீ"ங்காரம் ஒலிக்கும் ஓசை என்றும் எம் நினைவினிலே...
பார் புகழும் சங்கீதம் பண்ணுடனே பயின்று
சங்கீத ஆசிரியையாய் இசையதனை பயிற்றுவித்து
பார் புகழும் சங்கீதம் சாவுநிலை எய்தாது
பயிற்றுவித்தாள் சமுகம் பயனுறவே
காக்கும் எங்கள் குலதெய்வம் வீரபத்திரர் மீது
அளவில்லாக் காதல் கொண்டே - ஆர்வமுடன்
திருப்பணி என்றென்னும் மேற்கொண்டு
ஆலயம் மேம்பட செய்தாள் திருப்பணிகள்
மாண்முடனே வாழ்ந்த மாண்மிகு நாயகியாம்
கனகநாயகி இப்பூவுலகம் விட்டிங்கு
விண்ணுலகம் ஏவினாள் என்ற செய்தி கேட்டு
உற்றமும் சுற்றமும் கலங்கிதிங்கே
இன்றிருந்தார் நாளையிங்கு இருப்பதென்ன உண்மை
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ என்ற ஒளவையின் வாக்கிணங்க
அமைதி கொள்வோம் அமைதி கொள்வோம்
அளவில்லாக் காதலுடன் திருப்பணிகள் என்றும் செய்து
அவள் மனம் கொள்ளை கொண்ட குலதெய்வம்
வீரபத்திரரும். என்றுமவள் விரும்பும் கதிர்காமக்கந்தனும்
தம்முடன் அணைத்திடவே பிராத்தனை செய்திடுவோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
மயில்வாகனம் வாத்தியார் சார்பாக வாத்தியார் வம்சாவழி
Write Tribute