Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 JUL 1936
இறப்பு 22 AUG 2020
அமரர் இராஜேஸ்வரன் பொன்னம்பலம் கனகநாயகி
இளைப்பாறிய சங்கீத ஆசிரியை
வயது 84
அமரர் இராஜேஸ்வரன் பொன்னம்பலம் கனகநாயகி 1936 - 2020 மீசாலை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், தனங்கிளப்பு கோயிலாக்கண்டி, மீசாலை கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரன் பொன்னம்பலம் கனகநாயகி அவர்கள் 22-08-202 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற S. R பொன்னம்பலம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான லம்போதரம்(கணக்காளர்), க. கனகபூரணி(ஆசிரியை) மற்றும் ந. கனகபூபதி, காலஞ்சென்ற க. கனகசிங்கம்,  சண்முகநாதன்(ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி), க. கனகசோதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- நாவலப்பிட்டி, மாலைதீவு, சாவகச்சேரி இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான லம்போதரம் கமலராணி, நடராசா, மற்றும் கனகசிங்கம் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சத்தியசீலன்(இலங்கை), சத்தியவதனி(இலங்கை), சத்தியசிவம்(இலங்கை), காலஞ்சென்ற சத்தியமூர்த்தி மற்றும்சத்தியவாணி(பிரித்தானியா), சத்தியசோதி(பிரித்தானியா), சத்தியரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லௌசிகா, கிரிசாந், அஞ்சலா, அம்சனா, அக்‌ஷயா, அபிஷனா, அகலினியன், அகலின்பன், ஜனகன், ஜதுஷன், அபினா, அபினயா, அபினிதா, அபினன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட பொன்னம்பலம் கனகநாயகி அவர்களின் பிரிவுச்செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்