நினைவஞ்சலி
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராஜரட்ணம் தனபாலசூரியர் அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை பாசத்துடன் அரவணைத்து
வளர்த்த அன்புத் தந்தையே!
பதினெட்டு ஆண்டுகள்
சென்றாலும் எம்மனக் கண்ணில்
நிறைந்து இருக்கிறீர்கள்.
காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் நீங்கள் வாழ்ந்து
கொண்டேதான் இருக்கிறீர்கள்
எம்மோடு நீங்கள் இல்லை ஆனாலும்
நீங்கள் காட்டிய பாதையில் பயணித்து
நீங்கள் சொன்ன வாக்கை
நனவாக்கி உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனைப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்