கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langnau வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் வீரசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட புவனேந்திரன் வீரசிங்கம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உங்களது பிரிவுச்செய்து கேட்டு சொல்லணாத் துயரம் கொண்டோம் ! உங்களது நகைச்சுவையான அந்த இனிமையான வார்த்தைகள் இப்போது மட்டுமல்ல எப்போதும் எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் . உங்களது...