யாழ். அல்வாய் வடமேற்கு மாறாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புதியார் நமசிவாயம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி சபிண்டீகரணக் கிரியைகள் 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
My deepest condolences to you and your family