Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUN 1947
இறப்பு 14 MAY 2013
அமரர் புஷ்பவதி முத்துக்குமார்
(சேவியர் ரீச்சர், தமிழ்ப் பட்டதாரி ஆசிரியை)
வயது 65
அமரர் புஷ்பவதி முத்துக்குமார் 1947 - 2013 துணுக்காய், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வாழ்விடமாகவும், பின்பு லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த புஷ்பவதி முத்துக்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்து ஆண்டுகள் சென்றன
பாரில் நாம் அனாதையாகி!
பச்சைப் பாலகர்கள் போல் ஏங்குகிறோம்
பாசத் தாயுடன் பல தருணங்களுக்காக!

எத்தனையோ கடந்துள்ளோம்,
எதை எதையோ மறந்துள்ளோம்,
ஆனால் தாயே உன்னை மட்டும்
அழியாத நினைவில் கொண்டுள்ளோம்!

உயிர் தந்த அன்னை மட்டும் இல்லை நீ
ஊக்கம், நேசம், அரவணைப்பு, அன்பு, பலம்
மொத்தமும் ஊட்டி வளர்த்த தாயம்மா நீ!

நம் குழந்தைகளுக்கு கொடுப்பினை இல்லை,
இந்தப் பாசமான பேத்தியுடன் பழகி வளர!
அவர்கள் மனதிலும், உன் எண்ணங்கள்
என்றும் சுடராகி ஒளிக்க வேண்டும் என,
நித்தமும் நித்திரையில் ஒருமுறையாவது
உன் கதை கூறிடுவோம்!

மறு பிறவி இருந்தால்
மீண்டும் உன் கருவில்
உயிர் பெற வேண்டும்!
பிறவி எடுத்து உன்னை இதைவிட
பல மடங்கு நேசிக்க வேண்டும்!

காலத்துக்கும் நம் மனதில் வாழும்
காவியத் தெய்வத்தாயிற்கு பிள்ளைகளின் கண்ணீர் அஞ்சலி

உங்கள் பிரிவால் வாடும்
கண்ணன், மதன், ரேகா, பானு, வேணு

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices