Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 09 OCT 1961
உதிர்வு 09 NOV 2025
திரு பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை
வயது 64
திரு பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை 1961 - 2025 தாவளை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வட்டுக்கோட்டை கிழக்கு தாவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த

 உங்கள் முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
 உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
 31 நாட்கள் விரைந்தே போனதப்பா
 நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
 நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்

உங்கள் முகம் பார்க்க துடிக்கும்
வேளையில் நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
 வீசும் காற்றினிலும்

நாம் விடும் மூச்சினிலும்
 எட்டு திக்குகளிலும் உம் நினைவால்
வாடுகிறோம் அப்பா!

 உம் இழப்பை ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம் மீண்டும் பிறந்து
வருவீரா எம் அன்பு அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடை
 பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 11 Nov, 2025