Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 15 MAY 1942
விண்ணில் 10 FEB 2022
அமரர் பொன்னையா குலநாயகம் 1942 - 2022 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கானை சேச்றோட்டைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வதிவிடமாவும் கொண்ட பொன்னையா குலநாயகம் அவர்கள் 10-02-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிற்றம்பலம் பொன்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகனும், இணுவிலைச் சேர்ந்த ராஜரத்தினம் பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு இளைய மருமகனும்,

பாலதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயசுதா(சுவிஸ்), இளவரசன்(சுவிஸ்), பிரசாந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றஜிக்குமார்(சுவிஸ்), அபினா(சுவிஸ்), லங்காதரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிநாயகம், செல்வநாயகம், ராசநாயகம், ரத்தினம், மனோன்மணி மற்றும் தவமணிதேவி(இங்கிலாந்து), காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ்வரி(இங்கிலாந்து), வேவி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான யோகராணி, ரவிச்சந்திரன்(சுவிஸ்) மற்றும் சசிந்திரன்(சுவிஸ்), யோகேஸ்வரன்(இங்கிலாந்து), கணேஸ்வரன்(பிரான்ஸ்), கெங்காதரன்(சுவிஸ்), ஜெய்தா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சிறியத் தந்தையும்,

ஆராதியஸ்(சுவிஸ்), அரோண்(சுவிஸ்), ஜெஸ்வி(சுவிஸ்), சஜேஷா(சுவிஸ்), இஷானா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிரஷாந்தி லங்காதரன்(மகள்), இளவரசன் குலநாயகம்( மகன்), ஜெயசுதா றஜிக்குமார்(மகள்)

தொடர்புகளுக்கு

ஜெயசுதா றஜிக்குமார் - மகள்