Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 06 FEB 1947
இறப்பு 01 OCT 2023
திருமதி பூமணி தம்பிராசா 1947 - 2023 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மட்டுவில் தெற்கு நுணாவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கொழும்பு மொறட்டுவ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி தம்பிராசா 31ம் நாள் நினைவஞ்சலியும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச் செய்தி கேட்டு வருகை தந்து உடனிருந்து ஆறுதல் அளித்ததுடன் இறுதிச் சடங்கில் வெளி நாடுகளிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் நேரடியாக வந்து கலந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கும், மலரஞ்சலி செலுத்தியவர்கள், வெளி நாடுகளிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் தொலைபேசி மூலம் ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்தவர்களுக்கும் பிரசுரம், பதாகைகள் வெளியிட்டவர்களுக்கும் உரிய நேரத்தில் உணவு தந்து ஆதரவு தந்த அன்பு உள்ளங்களுக்கும் மற்றும் அல்லும் பகலும் அயராது உழைத்த உற்றார், உறவினர், பாசமிகு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல நாவெழா நிலையிலும் நன்றி சொல்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 02-11-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை இல. 141, காலி வீதி, தெஹிவளையில் அமைந்துள்ள concord Grand Hotel எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.  

 வீட்டு முகவரி:
 இல. 92, காலி வீதி,
மொரட்டுவ.

இங்ஙனம், க.தம்பிராசா குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்