Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பூலோகசுந்தரி யோகராசா
இறப்பு - 24 MAY 2012
அமரர் பூலோகசுந்தரி யோகராசா 2012 இளவாலை சிறுவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த பூலோகசுந்தரி யோகராசா அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.

தரணியில் பவனி வந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்று
பதினான்கு ஆண்டுகள் ஆனதம்மா...

ஆண்டு பல ஆனபோதும்
 உனையிழந்த தவிப்பதனில்
 ஏங்கி வாடுகின்றோம்...
 நீ வாழ்ந்து முடிக்கும் முன்
எமைவிட்டு வாழாது மறைந்ததேனோ?

ஆண்டுகள் நூறாயினும்
 எம் நினைவுகளும் வலிகளும் ஆறாதம்மா!
 உன் மலர்ந்த முகம் இனி எப்போது காண்போம்....
 ஆசைகளையும் கனவுகளையும் உன்னுள் அடக்கி
எம்மை பெரிதுவக்க வைத்தாய்
தினம் வந்து வாட்டும் உன் நினைவால்
 நிலை குலைந்து நிற்கின்றோம்
 கண் மறைந்த போதும்
 நீ எம் கண்முன்னே நிற்கின்றாய்!

நாம் மீளாத்துயரோடு உன்
நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்...

உந்தன் ஆத்மா
சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்