யாழ். தையிட்டி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், தையிட்டி மூர்த்திவீதியை வசிப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய் வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பவானந்தன் அவர்களின் நன்றி நவிலல்.
ஆலமரமாய் நின்று எங்கள் எல்லோருக்கும் நிழல் தந்த பெருவிருட்சம் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று அடிசாய்ந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த யாழ். போதன வைத்தியசாலை வைத்தியருக்கும், எம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்று அறிந்து ஓடோடி வந்த அயலவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கும், தொலைபேசி மூலமாகவும், நேரிலும் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியை செய்து முடித்த குருக்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்ட அன்பு உள்ளங்களுக்கும், வீதியோரமாக கண்ணீர் பதாகைகள் வெளியிட்டு கட்டியவர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், இன்றுவரை எமக்கு பல வழிகளிலும் உதவி புரிந்து நிற்போர்க்கும், குறிப்பாக நெட்டிலிப்பாய் வாழ் எமது நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
may his soul rest in peace,heart felt condolences to the family, ,thyiddy.