மத்தியான வெயினிலே சைக்கிள் பயணமது , பல்லவராயன்கட்டு பிரதான வீதியில் இருந்த ஒரே வீடு நம்ம அன்ரி வீடு , தண்ணீர் தண்ணீர் என்று ஓடிப்போனால் மண் குடத்தில் குளிர்ந்த தண்ணீரும் ஒரு கப்பும் எப்பவும் இருக்கும். அப்படிப்பட்ட இரு உள்ளங்களும் இப்போ எம்முடன் இல்லை. அங்கிளுடன் நானும் விரைவில் வந்து விடுகிறேன் என்று பயணித்து விட்டார் இன்று. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி கடவுளிடம் வேண்டுகிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி, அத்துடன் அன்னாரின் குடும்பத்தாருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறேன்.