Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 23 SEP 1934
இறப்பு 06 NOV 2025
திரு பொன்னுச்சாமி அருணாசலம்
முன்னாள் பொதுமுகாமையாளர் MPCS துணுக்காய்
வயது 91
திரு பொன்னுச்சாமி அருணாசலம் 1934 - 2025 சரசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி அருணாசலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில்
 நினைவாய் நிலையாய் என்றும்
 எங்களோடு எங்களின் இறைவனாய்- என்றும்

 எங்களை வழிநடத்த வணங்குகிறோம்
 முப்பத்தொன்று நாட்கள் போனாலும்
 முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!

 மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
 இதயத்திலும் வைக்கவில்லையப்பா
 உயிராய் வைத்திருக்கின்றோம்..!!

 நாட்கள் எத்தனை போனாலும்
 பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த

 உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
 சாந்திக்காய் வேண்டுகின்றோம்!    

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 06-12-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Pfarreiheim Goldach Schmiedgasse 4, 9403 Goldach எனும் முகவரியில் நடைபெறும் ஆத்ம சாந்தப்பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும்  அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
 Pfarreiheim Goldach
 Schmiedgasse 4,
 9403 Goldach.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யாதவன் - மகன்
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.