யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கமலாம்பிகை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 23-07-2020 வியாழக்கிழமை அன்று காலை 04:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று அஸ்தி கீரிமலை புனித தீர்த்தக்கரையில் கரைக்கப்படும். அதனைத் தொடர்ந்து சபிண்டீகரண கிரியைகள் நண்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைப்பெறும்.