1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் உடுவில் காளிகோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னப்பா யோகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே
நீங்கள் பிரிந்து ஒரு வருடம்
ஓடிப்போனது இன்னமும்
நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
உழைப்பை உரமாக்கி பாசமாய்
பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே...
ஓராண்டு கடந்தும்
உங்கள் நினைவுகள்
எமை தினமும்
வாட்டி வதைக்கின்றது..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
விருந்து உபசாரம்
Get Direction
- Saturday, 15 Jan 2022 12:00 PM