யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Émerainville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தெய்வேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இறையடி சேர்ந்து 31 நாட்கள்
நீங்கியும் நித்தம் நினைவில்
நிற்கும் எங்கள் குடும்ப விளக்கு!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டி பாசமிகு
தந்தையாய் பண்புள்ள அன்பராய்
வாழும் எங்கள் இல்லத்தின்
இதய தெய்வமே! நாளும்
பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதப்பா...
ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும்
உங்களின் எண்ணங்களும்
செயல்களும் எங்களுடனே
பயணிக்கும் அப்பா நீங்கள் எமை
விட்டுச் சென்றாலும் ஆறவில்லை
மனது ஆண்டுகள் பல கோடி
சென்றாலும் ஆறாது
ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 19-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் La malnoue 61 avenue de l'Europe 77184 Emerainville எனும் முகவரியில் நடைபெறும் . அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும் 🥲🥲🥲