3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்மா சுப்பிரமணியம்
வயது 96
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கன்னாதிட்டி, ஜேர்மனி Velbert, Brampton கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்மா சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின்
குத்துவிளக்கே நீங்கள்
எங்கே சென்றீர்கள் அம்மா!
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள் வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
தாயே உங்கள் முகம் பார்க்காமல்
கலங்கி நின்றோம் அன்றும்,
இன்றும் உங்கள் இழப்பின் வலி
நெஞ்சுக்குள் படபடக்குது
ஆண்டுகள் மூன்றல்ல நம்மூச்சுள்ள
வரை உங்களை மறவோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்