
எமக்கு சிறிய தந்தையாய் , இருந்து பலவழிகளிலும் வழிகாட்டியாக இருந்த ஒரு கலங்கரைவிளக்கு நீங்கள் ! தவறுவிட்டபோதெல்லாம் உணர்ச்சிவசப்படாமல் , கோவப்படாமல் புத்திமதி சொல்லும் மதியுரைஞர் நீங்கள் ! அரச பணியின் நெழிவுசுழிவுகளை உபதேசித்த வியாசர் நீங்கள் ! புகழ்மிகு ஆலயத்தியின் செயலாளாராக நான்கு தசாப்தங்களுக்கு மேல் ஆளுகை செய்த செம்மல் நீங்கள் ! எல்லோருக்கும் மரணம் வரும் என தெரியும் , ஆனால் உங்களுக்கு இவ்வளவு வேகமாக வரும் என கருதியிருக்க வில்லை ! எங்கள் குடும்பகூட்டின் ராஜபறவை நீங்கள் ! உங்கள் பிரிவு எல்லோரையும் பாதித்தது என்பதில் மாற்றம் இல்லை . உங்களைப்போன்றவர்களின் பிரிவுகள் , பறவைக்குஞ்சுகள் பிணைப்பகன்று பறந்து செல்கின்றன . கால நியதி ! சொர்க்கத்தின் வாசலில் எம்மையும் வரவேற்க தயாராக நில்லுங்கள்.