Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 SEP 1941
இறப்பு 16 FEB 2017
அமரர் பொன்னையா இராசரத்தினம்
(கல்வித்திணைக்கள உத்தியோகத்தர் யாழ்ப்பாணம், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர், வவுனியா, நிதியுதவியாளர் பிரதேசசெயலகம் சாவகச்சேரி, நிதியுதவியாளர் UNHCR, யாழ்ப்பாணம்)
வயது 75
அமரர் பொன்னையா இராசரத்தினம் 1941 - 2017 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா இராசரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐந்தாண்டு ஓடிற்றோ
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையகத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
 நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும் பப்பா.

பொன்னோடு பொருள் சேர்த்து
 பெரு வாழ்வு வாழ்ந்தாலும்
 பப்பாவின் நிழலின் கீழ்
 வாழ்கின்ற வரம் வருமோ!!!

உம் உதிரத்தால் எமக்குள்
 உம்மை சுமக்கின்றோம்
உடலை பிரிந்தோமே தவிர
உம்மையல்ல

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
 ஒரு முறையாவது வாங்க பப்பா
 உங்கள் முகம் காண...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்... 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices