Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 SEP 1944
இறப்பு 04 JUL 2020
அமரர் பொன்னையா கிருஸ்ணமூர்த்தி
வயது 75
அமரர் பொன்னையா கிருஸ்ணமூர்த்தி 1944 - 2020 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வோல்ஸ் ஓழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கிருஸ்ணமூர்த்தி அவர்கள் 04-07-2020 சனிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்தி, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி(கனடா), பவதாரணி(கொழும்பு), பாலகிருஷ்ணா(கனடா), டினேஷ்குமார்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவயோகராசா(கனடா), விஜயானந்த்(கொழும்பு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில்), சைலஜா(கனடா), வினேகா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராஜலட்சுமி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

கலாதரன், ஸ்ரீதரன்(சுவிஸ்), கருணாதரன், வனஜா, தனஜா, கவிதா, பிரபாதரன், ஐங்கரன், விஜயகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மாணிக்கம், சிதம்பரம் மற்றும் மார்கண்டு- சர்வேஸ்வரி, காலஞ்சென்ற கனகரட்ணம்- தவமணிதேவி, மகேஸ்வரி- காலஞ்சென்ற இலங்கைநாயகம், காலஞ்சென்ற மங்களேஸ்வரி- காலஞ்சென்ற கங்கநாதன், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், சர்பேஸ்வரி- குணரட்ணம், இலங்கைவேந்தன் -வீரலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுஷன்(கனடா), தர்ஷிகன்(கனடா), நாகசபரீசன், நாகவைஷ்ணவி, நாகவர்ஷினி(கொழும்பு), பவினன், பவிஷன், சகானா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்பு மாதம்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices