
Tribute
பிராத்திக்கின்றோம்
ஆறுமுகவேலழகனின் ஆலயம் சென்றால் அமைதியான முகத்துடனும்,அழகான புன்சிரிப்புடனும், நேர்த்தியான பார்வையுடனும் நிற்பவரே திருமதி பொன்மணி யோகநாதன் அவர்கள். முருகன் ஆலயத்தின் முத்தான வளர்ச்சியில் கணவருடன் சம்பங்காகத் தன் கடமையையும் செய்வார்.பூமாலை தொடுப்பதில்,உடைகள் தைத்து அணிவிப்பதில் ,ஆலயத்திற்கு வரும் அடியவர்களைக் கண்காணிப்பதில் சிறந்த ஒரு நிர்வாகியாகவே திகழ்ந்தார். இப்படி வாழ்ந்த தலைமைத்துவம் நிறைந்த உங்களைக் காலன் கவர்ந்து சென்றான் என்ற செய்தியைச் செவிகளால் கேட்டாலும் மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வைத்தியசாலை சென்ற
நீங்கள் திரும்ப வருவீர்கள் என்று காத்திருந்த கணவனும் ,பெற்றெடுத்த பிள்ளைகளும் கதிகலங்கி நிற்கிறார்கள்.ஆறுமுகனே எங்கள் குடும்ப விளக்கு எங்கே என்று தேடுகிறார்கள். ஆறுமுகனோ அழைத்து
விட்டேன் என்னருகில்,ஆறுதல் அடையுங்கள் என்கிறார்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆறுமுகனைப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்
ஓம் சாந்தி் ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
மாமியின் இழப்பு தாங்க முடியாத துயரத்தை தந்துள்ளது , மாமாவின் குடுப்பதினார் எல்லோருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .