என்றும் எமது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய சகோதரிக்கு, நான் உங்கள் பவாக்காவின் மகள் பவானி, கண்ணீர் கசிந்தொழுக வான் உறையும் தங்களுக்காக அனுப்பி வைக்கும் வண்ண மடல். மெல்லவே மேதினிவிட் டகன்றதும் ஏனோ? கள்ளமில்லா உள்ளத்தில், கவின்மிகு சிரிப்பழகில், துள்ளும் நடையழகில், துடிப்பான செயலழகில், தெள்ளிய ஞானத்தில், செம்மைமிகு இல்லறத்தில் அள்ளக் குறையாத அன்பெனும் ஊற்றினில், வல்வை மகளிரொடு, வளமான எமதூர்க் கல்விக்கூ டங்களில் கரிசனையாய்க் கற்பித்துச் சொல்லமுத மொழிபேசித் துயர்மாந்தர் இருள்போக்கி மெல்லவே மேதினிவிட் டகன்றதும் ஏனோ? ஈன்றெடுத்த அன்னைக்காய் இதழ்நாம் படைத்திடவே சான்றுபகர் பாடலொன்று தயவுடனே தந்தளித்தீர்! ஆன்றவும் ஆக்கமது ஏட்டதனில் பதியமுன்னே தோன்றாத் தொலைதேசம் சொல்லாமற் சென்றதேனோ? மண்ணகம் நீத்தின்று மலரவன் நிழல்சாய்ந்து விண்ணக வாழ்வதனில் வியப்புற இலங்குநீவீர் கண்ணென நாம்போற்று காவியநா யகர்சார்ந்து திண்ணியராய் எம்மினம் திளைத்திட வாழ்த்துவீரே! அன்புடன் பவானி தர்மகுலசிங்கம் குடும்பத்தினர். அல்வாய் , கனடா
There are some who bring a light so great to the world that even after they have gone the light remains ! Rest in Paradise Acca Ponrajah ( Peramagan) London