யாழ். சக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen, முல்லைதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலோமினம்மா ஜோர்ஜ் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
உலகைச் சுருட்டிய சுனாமியே
உனக்கு இன்று வயது பதினைந்து
உன்னால் உருக்குலைந்தவர்கள் அனேகர்
உன் கொடுமையை நினைத்து இன்றும்
உன்னைத் திட்டித் தீர்க்கின்றோம் சுனாமியே
உன் பெயரைத் தெரிந்து கொண்டோம்
உன்னை அழிக்க முடியாமல் அழுகின்றோம்
உனக்கு ஏன் அழிக்கும் ஆவேசம் வந்தது
உயிர்களை எடுக்க ஏன் நினைத்தாய்
உன்னை என்றுமே மறக்க, மன்னிக்க மாட்டோம்
வன்னியில் எப்படி வாழ்ந்தீர்கள் தெரியுமா?
எண்ண வண்ண பூக்களோடு சேர்ந்த காடு
வாகை சூடி வெற்றி கொடுத்த போராளிகள்
வாட்டம் இன்றி உற்சாகம் தரும் தளபதிகள்
வானுயர உயர்ந்து நின்ற எங்கள் தலைவன்
பதினைந்து ஆண்டுகளாக அழுகின்றோம்
பாசம் ஒன்றே எங்களுக்குத் தந்தீர்கள்
பணத்ததை என்றும் மதித்ததில்லையே
பாமரர் எல்லார்க்கும் உதவச் சொன்னீர்களே
பாவம் நாங்கள் என நினையாமல் ஏன் போனீர்கள்
குன்றத்து விளக்காக என்றும் ஒளி தந்தீர்களே
குதுகுலமாக எங்களை வாழ வைத்தீர்களே
குணவதியாக எல்லோரையும் மகிழ்வித்தீர்களே
குமுறும் எங்கள் நெஞ்சங்களை நினைக்கவில்லையே
குற்றுயிராக என்றும் உங்களை நினைத்து வாடுகிறோமே
ஆறாத் துயரத்தோடு அழும் உங்கள்
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்
There are some who bring a light so great to the world that even after they have gone the light remains ! Rest in Paradise Acca Ponrajah ( Peramagan) London