யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பெரியநாயகி கதிரித்தம்பி அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை
அன்று காலை 07:00 மணியளவில் கொழும்பு முகத்துவாரம் அந்தியேட்டிக் கிரியை
மண்டபத்திலும் வீட்டுக் கிருத்தியக் கிரியைகள் எதிர்வரும் 12-04-2021
திங்கட்கிழமை அன்று அன்னாரின் நீர்கொழும்பில் அமைந்துள்ள இல்லத்திலும்
இடம்பெற்று, அன்றைய தினம் மு.ப 11:00 மணியளவில் இல 137, கடற்கரைவீதி,
நீர்கொழும்பில் அமைந்துள்ள இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெறும்
அமரரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் தாங்கள்
குடும்ப சகிதம் வருகை தந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.