1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாவிலுப்பிள்ளை மாசில்லாமணி
ஓய்வுபெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி -மன்னார்
வயது 87

அமரர் பாவிலுப்பிள்ளை மாசில்லாமணி
1937 -
2024
சூரியகட்டைக்காடு, நானாட்டான், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார் நானாட்டான் சூரியகட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாவிலுப்பிள்ளை மாசில்லாமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீர் பிரிந்து
ஆண்டு ஒன்று சென்றது
மறைந்த உம் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
உம் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
உம் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !!
தகவல்:
குடும்பத்தினர்
May periyappa soul rest in peace, Amen