இருபதில் கால்பதித்து இருபதுநாள் ஆகவில்லை புலம்பெயர்ந்து பிறந்தபோதும் புலப்பெருமை மறக்காது உலகத்து சோதரரின் உதிரமது உன்மனதை வாட்டியதால்-அவர்கட்கு உதவுதற்காய் ஈருருளிப் பயணம்............. காலன் உன்மேல் கண்வைத்தான் பாரவூர்தி வடிவினிலே பெற்றவர் துடிதுடிக்க சுற்றங்கள் கலங்கி நிற்க எமன் வந்து உனை எடுத்து எமலோகம் கொண்டு சென்றான் பன்முகப்புலமை கொண்ட-பாதுஷனே பட்டங்கள் பல பெற்று பார்போற்ற வாழ்கையிலே சுகசெய்தி வருமென்று சுகிப்போடு காத்திருந்தோம். மலராகச் சென்ற உனை சருகாகிக் கண்டபின்னே மருகி மனம் வாடுகின்றோம். உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! சுவிஸ் மாமா(சேகர்) மாமி(சுயந்தினி) பிள்ளைகள்
I know too well of the devastation, hurt and tragedy that this will inevitably cause.