1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பத்மாவதி இரத்தினசபாபதி
வயது 68
அமரர் பத்மாவதி இரத்தினசபாபதி
1955 -
2024
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி:21/08/2025
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மாவதி இரத்தினசபாபதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!
இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!
நிலவை நேசித்தேன்!!
மறையும் வரை....
கனவை நேசித்தேன்!!
காலை வரை...
இரவை நேசித்தேன்!!
விடியும் வரை...
தாயே உன்னை நேசித்தேன்!!
என் உயிர் உள்ளவரை.....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் . உங்கள் தாயாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்