யாழ். வண்ணார்பண்ணை பேச்சியம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட காஞ்சனமாலை பத்மராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை நிகழ்வுகள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் 31ம் நாள் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 23-04-2025 புதன்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.41
கேசவில் பிள்ளையார் வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி...