1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி:12/04/2026
யாழ். வண்ணார்பண்ணை பேச்சியம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட காஞ்சனமாலை பத்மராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
காஞ்சனா நம்ப முடியவில்லை 31நாட்கள் கடந்து விட்டது இந்த வருடம் கேசாவிலுக்கு வரும்போது நீங்கள் வீட்டில் இருக்கமாட்டீர்கள் என்பதை நம்ப முடியவில்லை. இம்மளவு அவசரமாக நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்ததை...