3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பராசக்தி இராசநாயகம்
வயது 88
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அரியாலை பாலைவளவைப் பிறப்பிடமாகவும், முள்ளாத்தனை தெல்லிப்பழை, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பராசக்தி இராசநாயகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:01/08/2024
அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே -அம்மா!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
மூன்று ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-
அம்மா கண்முன்னே நீங்கள் வாழ்ந்த
காலம் கனவாகிப் போனதுவோ!
அம்மா எமை ஒரு நிமிடமும்
காணாவிட்டால் துடித்து பதை பதைத்த
நினைவுகளை இன்னும் கண்ணீர்
விழி நனைக்குதம்மா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-
அம்மா மாறாது ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
உங்கள் நினைவு எம் மனதை விட்டு அம்மா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்