யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 2ம் யூனிட்டை நிரந்தர வசிப்பிடமாக கொண்டிந்த பரமசிவம் செல்வரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாய் பண்பாய் பாசமாய்
எங்களை அரவணைத்த அன்புத் தெய்வமே
உங்கள் பிரிவின் இடைவெளி ஓர் வருடம் ஆகியதோ அம்மா!
நம்ப முடியவில்லையம்மா உங்கள் இழப்பை
உங்கள் உருவத்தை நாம் இழந்தோமன்றி
நின் உயிர் எம்மோடுதான் இருக்குதம்மா..!
வாழும் போதும் எம் வழிகாட்டி நீங்கள்
வானுலகில் இருந்தும் வழிகாட்டு நீங்கள்
எமக்கு மீண்டும் நீங்கள் வரவேண்டும் எம் குடும்பத்தில்
என்றும் காத்திருப்போம் உன் வரவுக்காய்!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!
எமதுயிர் உள்ளவரை
உங்களுக்காக உங்கள்
ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!