Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 16 MAR 1939
விண்ணில் 09 APR 2020
அமரர் பரமலிங்கம் பேரின்பநாயகி 1939 - 2020 அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம், வவுனிக்குளம், இந்தியா குன்றத்தூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் பேரின்பநாயகி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்றோடு ஈராண்டு அம்மா நீ இல்லை இங்கு
நேற்றுவரை வாழ்ந்துவிட்டோம் உன்னினைவில் நாம் இங்கு
நினைக்கையில் வியப்பாய் நிஜமாய் நாம் வாழ்கிறோமா?

அம்மா என்று நாமழைக்க யார் இங்கு நமக்குண்டு
 எம் தாய்க்கு நிகராக இவ்வுலகில் யாருண்டோ?
ஆண்டுகள் ஆனாலும் ஆறவில்லை காயமம்மா
மீண்டும் உன் வயிற்றினில் பிறந்திட வேண்டுமம்மா
 உன் மடியில் வாழ்ந்திட வரம்வேண்டி வா அம்மா

ஆண்டு இரண்டானாலும் அழியாத அன்புருவாக
 எங்கள் நெஞ்சங்களில் வாழும் பண்புருவான அம்மாவே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்