Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 16 MAR 1939
விண்ணில் 09 APR 2020
அமரர் பரமலிங்கம் பேரின்பநாயகி 1939 - 2020 அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,  செட்டிக்குளம், வவுனிக்குளம், இந்தியா குன்றத்தூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் பேரின்பநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா!
ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!

அன்னையாய் எமை சுமந்து
அரணமைத்து பாதுகாத்தாய்
அகம் நிறைந்து நாம் வாழ
மன மகிழ்ந்து பூரித்தாய்!

வார்த்தைகள் இல்லாத உங்கள்
வடிவம் கண்டோம் அம்மா
வர்ணிக்க முடியாத வார்த்தைகள் கண்டோம் அம்மா
அளவிட முடியாத உங்கள் அன்பு கண்டோம் அம்மா
சுயநலம் இல்லாத இதயம் கண்டோம் அம்மா

எமைப் பிரிந்தவளே! ஏன் எமைப் பிரிந்தாய்!
ஐயமில்லை! ஒன்று இரண்டு ஏன்
ஓராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உமை மறவோம் உங்கள்
நினைவுகளைச் சுமந்து வாழ்வோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!    

தகவல்: குடும்பத்தினர்