Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 12 APR 1924
மறைவு 22 SEP 2019
அமரர் பஞ்சாட்சரம் இராசம்மா (பாக்கியம்)
வயது 95
அமரர் பஞ்சாட்சரம் இராசம்மா 1924 - 2019 துன்னாலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், துணுக்காய் ஆலங்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா செக்கட்டிப்புலவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் இராசம்மா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்திக்கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக்கிரியைகள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்றது.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.