Clicky

அமரர் தி. பொன்னம்பலவாணர் ஐயா
பொன்னாலை சித்தி விநாயகர் ஆலய தர்மகர்த்தாவும், அர்ச்சகருமாவார்
இறப்பு - 26 MAR 2021
அமரர் தி. பொன்னம்பலவாணர் ஐயா 2021 பொன்னாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mayuranathan 27 MAR 2021 United Kingdom

பொன்னம்பலவாணரின் மறைவு பொன்னாலைக்கு பெரும் இழப்பு. பிரசித்தி பெற்ற சித்திவினாயகர் ஆலயம் அவருடைய தகப்பனார் திரு. தியாகராஜா ஐயாவினால் ஒரு பெரும் ஞானியின் ஆசீர்வாதத்துடன் பலகாலம் பேணப்பட்டு வந்தது. தியாகராஜா ஐயாவின் மறைவுக்குப் பின் பொன்னம்பலவாணர் தனதுமருமக்களுடன் கூடி பெரும் அர்ப்பணிப்புடன் பராமரித்து வந்தார். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. கடந்த பலதசாப்தங்களின் இன்னல்கட்கிடையில் கோவி்ல் நித்திய பூசை தவறாது நடாத்தியமைக்கு பொன்னாலை மக்கள் கடமைப்பட்டுள்ளனர்.